A.P.Mathan / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்குச்சந்தையின் மொத்தப்புரள்வில் மொத்த வியாபாரம் ஆதிக்கம் செலுத்தியிருந்ததுடன், ப்ளுசிப்கள் மீதும் அதிகளவு நாட்டம் காணப்பட்டது. ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளை கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தனர். பங்குச்சந்தையின் மொத்த கொள்வனவில் 74.6 வீதமான பங்கு கொள்வனவை இவர்கள் மேற்கொண்டிருந்தனர். சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் குட் ஹோப் ஆகிய பங்குகளின் விலைகளில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, சந்தை சரிவை எதிர்நோக்கியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியன குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. பான் ஏசியன் பவர் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தனர்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .