2026 மே 01, வெள்ளிக்கிழமை

இலங்கையின் முன்னணி நேரடி வெளிநாட்டு முதலீட்டாளராக சீனா

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நேரடி வெளிநாட்டு முதலீட்டாளராக சீனா திகழ்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் இலக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த நேரடி முதலீடாக பெற்றுக் கொள்வது என்பதற்கு அமைவாக, இது வரையில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 24 வீத பங்களிப்பை சீனா வழங்கியுள்ளதாக இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
 
தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே ஹொங் கொங் 12  வீதம், சிங்கப்பூர் 10 வீத பங்களிப்பை வழங்கியுள்ளன. நெதர்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளன.
 
இந்த ஆண்டில் இதுவரையில் பெறப்பட்டுள்ள நேரடி வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தாம் மகிழ்ச்சியடைவதாகவும், கடந்த ஆண்டில் மொத்தமாக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக பெறப்பட்டிருந்ததாகவும், இந்த எண்ணிக்கையை தாம் ஏற்கனவே இந்த ஆண்டில் அடைந்துவிட்டதுடன், டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்” என அமைச்சர் யாபா குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .