2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
பரவலாக வாரம் முழுவதும் தொடர்ச்சியான உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்த கொழும்பு பங்குச்சந்தை, செவ்வாய்க்கிழமை சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டு பகுதிக்கான நிதியறிக்கைகள் பெருமளவில் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, குறித்த காலாண்டில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்வரும் வாரத்தில் கொழும்பு பங்குச்சந்தை 7000 புள்ளிகளை எய்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,918.23 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3801.87 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
ஓகஸ்ட் 04ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 9,080,794,297 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 57,451 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 55,578 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,873 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
திங்கட்கிழமை
சுட்டிகள் நேர் பெறுமதியுடன் நிறைவடைந்திருந்தன. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியன அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. இது புரள்வு பெறுமதியில் 67 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. இது புரள்வு பெறுமதியை 2.2 பில்லியன் ரூபா எனும் கடப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. கொமர்ஷல் வங்கி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீதும் காணப்பட்டது. பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டு செயற்பாடுகள் குறைந்தளவில் பதிவாகியிருந்தது.
 
செவ்வாய்க்கிழமை
சந்தை சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்த போதிலும், புரள்வு பெறுமதி 1.5 பில்லியன் ரூபாவை எய்தியிருந்தது. வங்கித்துறை இதில் 51 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. கெப்பிட்டல் அலையன்ஸ் ஃபினான்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் மீதான சந்திப்புகள் இதில் பங்களிப்பை வழங்கியிருந்தன. மேலும் உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு டிஸ்டிலரீஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்கள் சிலோ ஃபினான்ஸ் மற்றும் சென்ரல் இன்வெஸ்ட்மனட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் பங்குகள் மீது ஈடுபாடு செலுத்தியிருந்தனர்.
 
புதன்கிழமை
கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்குகள் மீது விலை உயர்வுகள் பதிவாகியிருந்தமை காரணமாக சந்தை உயர்வடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது மொத்த பங்கு கைமாறல்கள் இடம்பெற்றிருந்தன. சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் தொடர்ந்து பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். கொமர்ஷல் வங்கி, டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி மற்றும் ஜோன் கீல்ஸ் வொரன்ட்கள் மீது விற்பனை பதிவாகியிருந்தது.
 
வியாழக்கிழமை
அ.ப.வி.சு 6900 புள்ளிகளை கடந்திருந்தது, இதில் சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கார்சன் கம்பர்பட்ச் ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பை செலுத்தியிருந்தன. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகள் மீது மொத்த வியாபாரங்கள் பதிவாகியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு ஒடெல் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்கள் யூனியன் வங்கி, சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா ஆகிய பங்குகள் மீது ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டு கொள்வனவு மொத்தப்புரள்வு பெறுமதியில் 33 வீத பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
 
வெள்ளிக்கிழமை
சந்தை பரந்தளவில் உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 1.5 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. நிறுவனசார் மற்றும் உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு அலுமெக்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டீசல் அன்ட் மோட்டர் என்ஜினியரிங் மற்றும் செலான் டிவலப்மன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை, சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ், பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை செலுத்தியிருந்தனர்.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிஐஎஃவ்எல், ஹுனாஸ் ஃபோல்ஸ், சிலோன் லெதர் (வாக்குரிமை), செங்கடகல மற்றும் செங்கடகல ஃபினான்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
பிசி பார்மா, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட், லங்கா சென்ச்சரி (உரிமை), ஒரியன்ட் காமன்ட்ஸ் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,300 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.62 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 221.85 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X