Editorial / 2020 ஜூன் 13 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 பரவல் காரணமாகப் பல குடும்பங்கள், நிதியியல் ரீதியாக இன்னல்களை அனுபவித்து வருவதால், அவர்கள், தமது அவசர பணத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு தீர்வாக, ' DFCC தங்கவரம்' அடகுச்சேவை வசதியை, DFCC வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், ஒப்பந்த ரீதியாகப் பொருள்களின் உரிமையை நிரூபிக்கும் திறன் கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளும், இப்போது தங்கம், தங்க நகைகளை அடகு வைக்க முடியும். DFCC வங்கி, 18 கரட் முதல் 24 கரட் தங்க நகைகளை ஏற்றுக்கொள்வதுடன், அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, இவை மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் (மாதத்துக்கு 1%) பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அடகுச்சேவை வசதிகளைப் பெற்றுக்கொள்வோர், தமது சௌகரியத்துக்கு ஏற்ப, அவற்றை மீட்டுக்கொள்வதற்கு அதிக பட்சமாக 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
DFCC வங்கியின் தங்கவரம் அடகுச்சேவை வசதியானது, ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களில், அதிகூடிய முற்பணத் தொகை, அடகுவைக்கும் நகைகளின் அந்தரங்கம், பாதுகாப்பு உத்தரவாதம், தேவைப்படும்போது அவற்றை மீட்டுக்கொள்ள விரும்பினால் நெகிழ்வான கட்டணத் திட்டங்கள், முன் அறிவிப்பின்றி மீட்டுக்கொள்ளும் வசதி, வார இறுதி வங்கிச் சேவைகள், வார நாள்களில் நீட்டிக்கப்பட்ட வங்கிச்சேவை நேரம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும், எவ்விதமான மறைமுகக் கட்டணங்களின்றி, சந்தையில் கிடைக்கப் பெறும் மிகச் சிறந்த சேவையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago