2025 மே 21, புதன்கிழமை

MBA கற்கையை அறிமுகம் செய்யும் SLIIT

Editorial   / 2018 மே 15 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIIT, தனது வியாபார முகாமைத்துவ முதுமாணி (MBA) கற்கையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  

உயர் கல்வி அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்தப் புதிய MBA கற்கை எதிர்வரும் ஜுலை மாதம் SLIIT Business School இல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட தலைவர்கள்,  முகாமையாளர்களுக்கு அவசியமான முகாமைத்துவ திறன்களை பெற்றுக் கொள்ளமுடியும்.  
SLIIT-MBA அறிமுகம் தொடர்பில் SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உப வேந்தருமான பேராசிரியர். லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “MBA கற்கையை வடிவமைப்பதற்கு துறையின் நிபுணர்கள் அடங்கலாக முக்கிய பங்காளர்களுடன் இணைந்து நாம் பணியாற்றியுள்ளோம். இது எமது மாணவர்களுக்கு உயர் மட்டப் பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவத் திறன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக அமைந்திருக்கும். இதனூடாக இன்றைய மாற்றமடைந்து வரும் உறுதியற்ற வியாபார சூழலில், அவர்களுக்கு நிலைபேறாண்மை, புத்தாக்கம்,  மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவசியமான தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடிய தகைமை கிடைக்கும்” என்றார்.  

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் Sprott School of Business இன் இணை பீடாதிபதி பேராசிரியர். மைக்கல் ரொட் கருத்துத் தெரிவிக்கையில், ‘சுதந்திரமான உலகில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பான முகாமையாளர்கள் எமக்குத் தேவை. SLIIT உடன் இணைந்து இதைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் முன்வந்துள்ளதை இட்டு  பெருமையடைகிறோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .