2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘அதிபர் நியமிக்கப்படுவார்’

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - பாண்டியன்குளம்  மகா வித்தியாலயத்துக்கு, விரைவில் அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையானது, கடந்த ஜூலை மாதம் முதல் அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருகின்ற நிலையில், இது தொடர்பில்,  வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், கல்வி அமைச்சின் ஊடாக, அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும், இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லையெனவும் இருந்தபோதும், குறிதத் பாடசாலைக்கு, அதிபர் ஒருவரை விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .