Niroshini / 2021 ஜூலை 05 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணீரூற்று பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மிதிவெடி அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில், நேற்று (04) துப்புரவு பணியை மேற்கொள்ளும் போது, நிலத்தில் புதையுண்ட நிலையில், வெடிபொருளொன்று இனங்காணப்பட்டது.
இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார். குறித்த பகுதியை மிதிவெடி அபாய பகுதியாக அடையாளப்படுத்தியதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய, வொடிபொருளை அகற்றுவதற்கா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.


1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026