2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘என்னால் ஒன்றும் செய்ய முடியாது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 24 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கோணாவில் யூனியன் குளம் பகுதியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்தில் வாழும் மக்கள் கடன் திட்டத்தில் வீடுகளைப் பெற்று கடனாளிகளானதுக்கு தன்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வாக்குகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களுக்காகவும் முன்னைய ஆட்சியாளர்கள் தங்களைப் பயன்படுத்தினார்களே தவிர, தங்கள் கிராமத்தில் எந்த அபிவிருத்திகளையும் அப்போதைய ஒருங்கிணைப்புத் தலைவரான முருகேசு சந்திரகுமார் முன்னெடுக்க முயலவில்லை என குறித்த மக்கள் தெரிவித்த நிலையிலேயே, அப்போது இடம்பெற்றதற்கு தன்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது என சந்திரகுமார் கூறியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .