சண்முகம் தவசீலன் / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் பகுதியில் வீட்டுக் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.
நவரத்தினம் பிரியங்கா (வயது 23) என்ற யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04) இரவு உணவு அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியில் சென்ற யுவதியை காணவில்லை. இதனையடுத்து உறவினர்கள் தேடிப்பார்த்த போது, கிணற்றில் சடலம் தென்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025