2025 மே 05, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் கடைகளை மூடிய பொலிஸார்

Niroshini   / 2021 மே 25 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி நகரில், இன்றைய தினம் (25)  திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில், அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை பொலிஸார் உடனடியாக மூடியுள்ளனர்.

இன்றைய தினம் அதிகாலை, பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், கிளிநொச்சி நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களும் வழமை போன்று நகருக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைத் தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்மைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X