Freelancer / 2022 மே 05 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - தீர்த்தக்கரை, வேளாங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கொட்டுறுட்டி குளத்தில் நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.
சடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. (R)
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago