2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பின் கூட்டத்தில் உடற்பரிசோதனை : பொதுமக்கள் விசனம்

சண்முகம் தவசீலன்   / 2018 ஜனவரி 30 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்துக்கு, வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னர் உள்ளே செல்வதுக்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியிலும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்குபற்றிய  பிரச்சார கூட்டம் நேற்று (29) மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது.

அங்கு வருகைதந்த பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பூரண உடல் பரிசோதனை மற்றும் உடமைகள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் கூட்டத்துக்கு வருகைதந்த மக்கள் விசனம் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .