2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சிறுவனை காணவில்லை

Editorial   / 2019 மார்ச் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லையென, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 9இல்  கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 24ஆம் திகதியன்று, தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என, தந்தை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்த தந்தை, மகன் தொடர்பில் தகவலறிந்தால், 0779240145 எனும் அலைபேசிக்கு அறியத் தருமாறும் தயவுடன் கோரி நிற்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .