Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - உமையாள்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான சிறுவர் பூங்கா, நேற்று மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு, நேற்று முற்பகல் 11 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கம்பெரலியா திட்டத்தின் ஊடாக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, குறித்த சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த சிறுவர் பூங்காவை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் திறந்து மாணவர் பாவனைக்குக் கையளித்தார். குறித்த நிகழ்வில் வலய கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026