2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘சுதந்திர தினத்தை கரிநாளாக நினைவுகொள்வோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை, கரிநாளாக நினைவுக்கொள்ளவிருப்பதாக, கேப்பாப்புலவு நிலமீட்பு பேராட்டத்தை வழிநடத்தும் தலைவர்களில் ஒருவரான அரியகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்கள் தாய்நிலம் எங்களுக்கு வேண்டும் என்றும் எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்றும் நோக்கோடு, எங்கள் நிலத்தை கேட்டு, இலங்கையின் இரண்டு சுதந்திர தினத்தை சந்தித்த, சுதந்திரமில்லாத மக்களாக நாம் இந்த மண்ணில் வீதியோரத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவருகின்றோம்” என்றார்.

இம்முறை இலங்கையின் சுதந்திர நாளை துக்கநாளாக, கருப்பு பட்டி அணிந்து நினைவுகொள்ளவிருப்பதாகத் தெரிவித்த அவர், இது எங்கள் துக்கநாளெனவும் எங்கள் மண்ணில்,  எங்கள் வீடுகளில், எங்கள் பொருளாதாரத்தை வைத்து எப்போது வாழ்கின்றோமோ அன்றுதான் எங்களுக்கு சுதந்திர நாளெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .