Niroshini / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா, இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் உள்ளிட்ட சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை, பொலிஸார், நேற்று (01) இரவு, பறிமுதல் செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடலட்டை, சுறா, இறகு, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் கடத்த இருப்பதாக, கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் மற்றும் மண்டபம் வனத்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது, வேதாளை தெற்கு தெருவில் சதாம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி, வைத்திருந்த 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா, இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இப்பொருள்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்ம படகு மூலம் இலங்கைக்கு நேற்று (1) இரவு, நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக, கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
29 minute ago