2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்திய காரியாலயம் திறந்து வைப்பு

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிராந்திய காரியாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் திறந்து வைக்கப்பட்டது

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சர்வதேச மாணவர் அமைப்பினால் விசுவமடு பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும்  பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனுடைய ஆரம்ப கட்ட கொடுப்பனவுகள் இந்நிகழ்வில், வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் மயுரன், புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .