Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை, இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் போக்குவரத்து சபையினரும் நடைமுறைப்படுத்தவில்லையென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடத்தப்பட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, பஸ் சேவைகள் நடத்துவது என முடிவுகள் எடுக்கப்பட்டதாவும் இருந்தபோதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் போக்குவரத்துப் பிரிவினரும் தொடர்ச்சியாக இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள், வெறும் தீர்மானங்களாகவே உள்ளதெனத் தெரிவித்த அவர், அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் ஊடாகவே, கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
47 minute ago
51 minute ago