Niroshini / 2021 நவம்பர் 08 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இன்று (08) காலை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்வடைந்துள்ளது
இதேபோல், கல்மடு குளத்தின் நீர்மட்டம், 18 அடி 4 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர் மட்டம், 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை குளத்தின் நீர் மட்டம், 10 அடி 9 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.
அத்துடன், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம், 16 அடி 9 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம், 3 அடி 11 அங்குலமாகவும் புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம், 16 அடி 01 அங்குலமாகவும் குடமுருட்டி குளத்தின் நீர் மட்டம், 6 அடி 4 அங்குலமாகவும் வன்னேரிககுளத்தின் நீர் மட்டம், 09 அடி 1 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
10 minute ago
33 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
38 minute ago
48 minute ago