Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி சிவபாத கலையகம் பாடசாலையின் மாணவர்களின் நன்மை கருதி, பாதுகாப்பான ரயில் கடவையை உருவாக்குமாறு, பாடசாலையின் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று (03) நடைபெற்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பாடசாலைச் சூழலில், மாணவர்களுக்கு இளைஞர்களின் தொல்லை காணப்படுவதாகவும் இது தொடர்பாக வலயக் கல்விப் பணிமனையிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.
எனவே, இது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதிபர் கோரிக்கை விடுத்தார்.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago