2025 மே 10, சனிக்கிழமை

பாலம் புனரமைப்பு

Niroshini   / 2021 ஜூலை 05 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் பிரதான வீதியில்,  சேதமடைந்த நிலையில் காணப்பட்ட பாலத்தின்  புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் - அம்பலப் பெருமாள்குளம் உள்ளிட்ட 07க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களுக்கு செல்லுகின்ற பிரதான வீதியில் காணப்பட்ட குறித்த பாலம், 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, சேதமடைந்தது.

இந்த நிலையில், தற்போது குறித்த  பாலத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த வீதியில் காணப்பட்ட ஏனைய பிரதான பாலங்களின் மதகுகள்  தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X