2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் இன்று திங்கட்கிழமை(17) காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (13) முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்புக்கு சென்றமையால் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று (17) மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த புதைகுழியில் இருந்து இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்  உட்பட மொத்தம் 276 முழுமனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .