2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பெற்ற தாயை 5 வருடங்கள் கூண்டில் அடைத்து கொடுமை

George   / 2016 ஏப்ரல் 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் பெற்ற தாயை (வயது 95) கூட்டில்  அடைத்து வைத்துள்ளதாக  சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்படுள்ளது.

வவுனியா சந்தசோலைக்  கிராமத்தில்  வசித்துவரும் நபரொருவர் தனது தயை  5 வருடங்களாக கூட்டில்  அடைத்து வைத்துள்ளதாக  பொதுமகன்  ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை  மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில்  அனுமதித்தனர். 

இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மீது தவறான  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X