2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரைத் தாக்கிய கிளிநொச்சி நபர் கைது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, நகர்ப் பகுதியில் வைத்து பொலிஸார் ஒருவரை செவ்வாய்க்கிழமை (25) இரவு தாக்கிய குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரை, புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், குளப்பிட்டி பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமையைக் கண்டித்து, வடமாகாண ரீதியில் செவ்வாய்க்கிழமை (25), ஹர்த்தால் நடைபெற்றது.

இந்நிலையில், கிளிநொச்சி ஏ - 9 வீதியில் சென்ற வாகனங்களை நபர் ஒருவர் மறித்துள்ளார். அந்நபரை அப்புறப்படுத்தச் சென்ற பொலிஸார் ஒருவர் மீது, அந்நபர் போத்தலால் தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.  இதனால் கிளிநொச்சி நகரப்பகுதியில், பெரும் பதற்றம் நிலவியது.

ஏ - 9 வீதியின் குறுக்காக டயர்களைப் போட்டு பொதுமக்கள் எரித்தனர்.

கலகமடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அதிகம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பொலிஸாரைத் தாக்கிய நபர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .