2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மணல் குவியல்: பொலிஸார் வழக்குத் தாக்கல்

Niroshini   / 2021 ஜூன் 09 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - உப்புமாவெளி பிரதேசத்தில் உள்ள ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணியில் குவிக்கப்பட்டுள்ள மணல் குவியல்கள் தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸாரால், இன்று (09) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான், மணல் அகழ்வுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.  

இதேவேளை, உப்புமாவெளி மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை, இன்றைய தினம் (09), கணியவளத் திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதன்போது, குறித்த மணல் அகழ்வுககான அனுமதி பெறப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரிவித்த அதிகாரிகள், யாழ்ப்பாணம் சென்று, இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதாகவும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .