Niroshini / 2021 மே 30 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில், நேற்று (29) இரவு, மனைவி மீது கணவன் வாள்வெட்டு மேற்கொண்டதில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், வாள்வெட்டைத் தடுக்கச் சென்ற 24 வயதுடைய உறவினர் இளைஞன் ஒருவருமே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதன் விளைவாகவே, இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து, சந்தேகநபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
14 Nov 2025
14 Nov 2025