2025 மே 21, புதன்கிழமை

மன்னாரில் செயலமர்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடளாவிய ரீதியில், இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஆசிய ஒன்றியம் ஏற்பாடு செய்த செயலமர்வொன்று,  மன்னார் விருந்தினர் விடுதியில், இன்று (11) நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில், அனைத்து மதங்கள், இனங்கள் மத்தியில் காணப்படும் பொதுவான விழுமியப் பண்புகள் ஊடாக சமூகத்தில் முரண்பாடுகள், பாரபட்சம், வன்முறைகள் ஏற்படுவதை குறைப்பது தொடர்பாகவும் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில், இளைஞர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவுரைகள் மூலமும் நடைமுறை பயிற்சிகள் மூலமும் தெளிவுபடுத்தப்பட்டன.

இதன்போது, ஆசிய ஒன்றியத்தின் பயிற்சி வழங்குநர்களான றம்சி, தெவுனி விரிவுரைகளை வழங்கினர்.

குறித்த பயிற்சிகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள், தொடர்சியாக மாவட்ட ரீதியில் உள்ள இளைஞர்கள், யுவதிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X