Editorial / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்றை சர்வதேச சிறுவர் தினமான இன்று முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1669 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? எனக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .