2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது காற்றாலை மன்னாரில் திறந்துவைப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது  காற்றாலை மின் உற்பத்தி பூங்காவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக இன்று (08) திறந்து வைத்தார். 

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுகுடா பகுதியில் இந்த மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலீபன், வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X