Niroshini / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் ஆகியோர்களால், இன்று (27) காலை பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம், பிற்பகல் 1 மணிவரை முன்னெடுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முல்லைத்தீவிலும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதனால், நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளர்கள். பிற்பகல் 1 மணிக்கு பின்னரே சிகிச்சை நடைபெறும் என அறிவித்துள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
35 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
50 minute ago