Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் நியமிக்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் பணிக்கு வராததன் காரணமாக, வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நெருக்கடி காணப்படுவதாக, வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது, புதிய ஆசிரியர்கள் பணிக்கு வருவதில்லை. இதன் காரணமாக, பாடசாலைகளில் ஆசிரிய நெருக்கடி காணப்படுகின்றது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் ஆகியவற்றில் உள்ள பல பாடசாலைகளில், அதிபர்கள் இல்லாததன் காரணமாக, பதில் அதிபர்களே பணியில் உள்ளதாகவும், வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 minute ago
10 minute ago
21 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
21 minute ago
50 minute ago