Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவீல், யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலி அறுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் பொலிஸார், இன்று கைதுசெய்துள்ளனர் .
யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (11) உடுப்புக்குளம் பிரதான வீதி வழியே சிலாவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், யுவதியை இடைமறித்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட யுவதி, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிலாவத்தை பிரதான வீதியில் இயங்கும் நிறுவனம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெரா காணொளிகளை பரிசோதித்தனர்.
இதன்போது, சந்தேக நபர்களை அடையாளங்கண்ட பொலிஸார், அவர்களை கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago