Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ரயில் பாதுகாப்பு கடவை, ஈஷி மிஷன் தேவாலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் தலைமையில், இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அமைக்கப்பட்ட இந்தப் பாதுகாப்புக் கடவை, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வாவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்த டி சில்வா, தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026