2026 மே 14, வியாழக்கிழமை

வடக்கு போராட்டத்துக்கு கிளிநொச்சி மக்கள் ஆதரவு

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மக்கள் இன்று(13) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி  மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பழைய கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்றது.

அநுராதபுரம்  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அரசியல் கைதிகளின் வழக்குக்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப்போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும்  இன்று காலை மூட்டப்பட்டிருந்தோடு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .