2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாகாண சபையை ’முதலமைச்சர் சீரழித்தார்’

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக் கட்சியில், இளைஞர் - யுவதிகள் பெருமளவாக இணைந்து, அதன் பல்வேறு பொறுப்புகளிலும் பங்குகொண்டு, கட்சியை வழிநடத்த முன்வர வேண்டுமெனத் தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, நல்ல அறிவுடைய சமூகத்தைக் கொண்டு, மாகாண சபையைச் சிறப்பாக வழிநடத்த முடியாமல், அதன் முன்னாள் முதலமைச்சர் போட்டுடைத்துள்ளார் என்றுச் சாடினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வழிகாட்டலில், இன்று (04) காலை, வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்துரைத்த அவர், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிகளை, இளைஞர்கள் அலங்கரிக்க வேண்டுமென்றும் அதற்காக, தற்போதே தமது கட்சியில் இணைந்து, அதன் பல்வேறு படிநிலைகள் ஊடாக அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறியதோடு, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தான் ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

கடந்த முறை, வடமாகாண சபைத் தேர்தலுக்காக, கல்வியியலாளர்கள், சட்டவாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் என்று மிகவும் உயர்ந்த ஓர் கல்விச் சமுகத்தவர்களையே தேர்தலில் நிறுத்தியதாகத் கூறிய அவர், இவ்வாறான ஒரு நல்ல அறிவுடைய சமூகத்தைக் கொண்டு, மாகாண சபையைச் சிறப்பாக வழிநடத்த முடியாமல், அதன் முன்னாள் முதலமைச்சர் போட்டுடைத்துள்ளார் என்றுச் சாடினார்.

(படங்கள்: .அகரன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .