2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வயோதிபரின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் - சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் - உப்பளம் பகுதியில், இன்று காலை,   வயோதிபர் ஒருவருடைய சடலத்தை, மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்,  மன்னார் - பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது 82) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர், நேற்று (25) இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையிலேயே, இன்றுக்  காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .