2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - செட்டிகுளம் பொலிஸ் பிரவுக்குட்பட்ட முகத்தான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று அவதானிக்கபட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள முகத்தான்குளத்துக்கு அருகாமையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக  யானையின் சடலம் ஒன்றை அவதானித்த பொதுமக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் சடலத்தை அவதானித்ததுடன், யானை இறந்தமைக்கான  காரணத்தை அறியும் முகமாக  மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .