2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் 4 இளைஞர்கள் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில், நேற்று (20), கஞ்சா மற்றும் ஹெரோய்ன் பொதிகளை தம்வசம்வைத்திருந்த குற்றச்சாட்டில், 4 இளைஞர்கள், வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, எட்டு அலைபேசிகள், எட்டு லைட்டர், 800 மில்லிகிராம் கேரளா கஞ்சா, ஹெரோய்ன் என்பன கைப்பற்றப்பட்டன.
 
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தாண்டிக்குளம், புதுக்குளம், மரக்காரம்பளை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்

சேர்ந்த 22, 24, 25, 29 வயதுடையவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X