Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு கொக்குளாய் வீதியில் செம்மலைப்பகுதியில் நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தின் போது, செம்மலைப்பகுதியைச் சேர்ந்த கா.பாஸ்கரன் (வயது 50) அதே பகுதியைச் சேர்ந்த ஞா.ஜனார்த்தன் (வயது 23) ஆகிய இருவரும படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, கா.பாஸ்கரன் (வயது 50) உயிரிழந்த நிலையில், ஞா.ஜனார்த்தன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .