2025 மே 22, வியாழக்கிழமை

விபத்து: சாரதி காயம்

Editorial   / 2019 மே 26 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியில், இன்று (26) காலை 9.30 மணியளவில், ஓட்டோவொன்று விபத்துக்குள்ளானதில், சாரதி காயமடைந்தார்.

வவுனியா மணிக்கூட்டு பகுதியில் இருந்து சூசைப்பிள்ளையார்குளம் நோக்கி கந்தசுவாமி கோவில் வீதியூடாக பயணித்த ஓட்டோவொன்று கட்டுப்பாட்டையிழந்து, வீதியின் அருகேயுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டோ சாரதி காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை, வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X