2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீடு புகுந்து வாள்வெட்டு; பெண் உட்பட ஐவர் படுகாயம்

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.

இச்சம்பவத்தில், பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்நத் சம்பவம், நேற்று (14) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வீட்டுக்குள் நுழைந்தவர்கள், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளனரெத் தெரிவித்த வவுனியா பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .