2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக மாணவி உயிரிழப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

வெள்ளத்தால் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த சந்திரபாலன் தானுயா (வயது 09) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (22) முதல் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த சிறுமி நேற்று (25) உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் மரணவிசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரமான முறையில் அன்றாட கருமங்களை ஆற்றுமாறு பொதுமக்களை உரிய அதிகாரிகள் வேண்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .