Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.என். நிபோஜன் / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய 6 பேர் இராணுவம், விமானப்படையினரால் இன்று (09) காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (07) குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்து வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அவ்வனர்த்தத்தில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியை பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.
அவ் முயற்சியால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்க இராணுவத்தினர், கடற்படை மேற்கொண்ட முயற்சியால், உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் மீட்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
53 minute ago