2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விளையாட்டுத் துறை சார்ந்த பிரச்சினைகள் ஆராய்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் வருகை தந்து கலந்துரையாடல் ஒன்றை நேற்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹாதீப் மொஹமட் ஹரீஸ் மேற்கொண்டார்.

வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் அழைப்பின் பேரில், வவுனியாவுக்கு வருகை தந்த பிரதிஅமைச்சர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன்போது, வவுனியா மாவட்ட பாடசாலைகளில் உள்ள மைதானப் பிரச்சினைகள், உதைப்பந்தாட்ட வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெளிநாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லும் மாவட்ட மட்ட வீரர்களுக்கான உதவிகளை வழங்குதல், மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் செயற்திட்டத்தை முன்னெடுத்தல் என பல விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.திஸாநயக்கா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோதரராதலிங்கம், முத்தலிப் பாபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, விளையாட்டு உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X