2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பன்னவெட்டுவான் கிராமத்தின் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் அரம்பம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சண்முகம் தவசீலன்
 
மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பன்னவெட்டுவான் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகள் திங்கட்கிழமை (17) நண்பகல் 12 மணியளவில் வைபவ ரீதியாக வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
குறித்த வீதியானது மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் (A - 14)  இருந்து பன்னவெட்டுவான் கிராமத்தை நோக்கி செல்லும் பிரதான வீதியாகும் இவ்வீதியின் 0.65 கிலோ மீட்டர் தூரத்தை 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் 08 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு குறித்த வீதியின் புனரமைப்புப்பணிகளை மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.
 
இவ் நிகழ்விற்கு மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, மன்னார் வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.துசியந், மடு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரொஹான் குரூஸ், பன்னவெட்டுவான் பாடசாலை அதிபர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் தனது கருத்தை தெரிவிக்கையில் கடந்த வருட இறுதியில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த சந்தர்ப்பத்தில் மக்களது நலன்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தம்மால் இயன்ற உலர் உணவுப்பொதிகளை வழங்கி அவர்களை இரவு 10 மணியளவில் சந்தித்து உரையாடிய வேளை குறித்த கிராம மக்கள் தமது குறைகளாக இரண்டு முக்கிய விடயங்களை அமைச்சரிடம் முன்வைத்திருந்தனர்.

அவையாவன தமது முன்பள்ளிக்கு தளபாடங்கள், மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த தமது கிராமத்துக்கான பிரதான வீதியையும் புனரமைத்துத்தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவை இரண்டையும் 2016 ஆம் ஆண்டு தான் செய்துதருவேன் என்று அன்றய தினமே வாக்குறுதி வழங்கிச் சென்ற அமைச்சர் முதல்கட்டமாக 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முன்பள்ளிக்கான தளபாடத்தொகுதியை தமது நிதியில் வழங்கியிருந்ததோடு தற்போது குறித்த இரண்டாவது வேண்டுகோளையும் இன்றய தினம் நிதியை ஒதுக்கி மக்களது வேண்டுகோளுக்கு தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதை இட்டு தாமும் தமது பிரதேச மக்களும் நன்றியோடு நினைப்பதோடு, அமைச்சரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.​


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .