2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தலை மன்னார் கடற் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 22 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஐந்து படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி இந்த 22 இந்திய மீனவர்கள் கடற் படையினரினால் கைதுசெய்யப்பட்டு தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி மீனவர்களை பொலிஸார் மன்னார் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 22 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

எனினும் இந்திய மீனவர்களின் படகுகளை கையளிப்பதற்கான வழக்கினை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X