2025 ஜூலை 24, வியாழக்கிழமை

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி; 26 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்,திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ளமனித புதை குழியில் இருந்து இன்று திங்கட்கிழமை வரை 26 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ஆம் திகதியில் இருந்து கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய சட்ட வைத்திய நிபுணர் டி.எல் .வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதை குழி தோண்டும் நடவடிக்கை இடம் பெற்றது.

இதன் போது புதிதாக 8 மனித எழும்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவற்றில்  ஆறு வயது மதிக்கத்தக்க ஒருவரின்  எலும்புக்கூடும்   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .