2025 ஜூலை 24, வியாழக்கிழமை

10 விவசாயக்குடும்பங்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்குகின்ற சமுர்த்தி வங்கிச் சங்கங்களிளால் பத்து விவசாயக் குடும்பங்களுக்கு நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

முள்ளியவளை, சிலாவத்தை, செம்மலை ஆகிய சமுர்த்தி வங்கிச்சங்கங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இவ்வாறு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சிவநேசராஜா, நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.பராசக்தி, கறைத்துறைப்பற்று மகா சங்க முகாமையாளர் கே.தேவகுமார் உள்ளிட்ட முள்ளியவளை, சிலாவத்தை, செம்மலை ஆகிய சமுர்த்தி வங்கிச்சங்கங்களின் முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .