2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 11 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


ஆங்கிலப் பாட ஆசிரியர்களின் மொழித்திறனையும் கற்பித்தல் திறனையும் மேம்படுத்தும் முகமாக ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை மன்னாரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்ட மும்மொழிச் சங்கத்தின் அனுசரணையில் நடைபெறுகின்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 75 ஆங்கிலப் பாட  ஆசிரியர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.

ஜே.ஆர்.எஸ் அமைப்பின் நிதியுதவியுடன்  மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள வடமாகாண ஆங்கில உதவி பயிற்சி மையத்தில் ஆரம்பமாகியுள்ள இந்தப் பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்

இதன் ஆரம்ப நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், வடமாகாண ஆங்கில மத்திய நிலைய முகாமையாளர் எஸ்.ஏ.ராஜன் குரூஸ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டுள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த  ஆங்கிலப் பாட  ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படாத நிலையில், வடமாகாண கல்வித் திணைக்களம் மேற்படி ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியை வழங்க பூரண ஒத்துழைப்பு  வழங்கியுள்ளதாக வடமாகாண ஆங்கில மத்திய நிலைய முகாமையாளர் எஸ்.ஏ.ராஜன் குரூஸ் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X