2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் காயமடைந்த மற்றையவரும் மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த கோ.ஜெயரூபன்   என்பவர் திங்கட்கிழமை (26) இரவு மரணமடைந்ததாக அவ்வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி பிரதேசத்தில் நேற்றையதினம் (26) பகல் கன்டர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதால் ரா.ஆனந்தகுமார், கோ.ஜெயரூபன் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இவர்கள்  இருவரும்; வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில், ரா.ஆனந்தகுமார் நேற்றையதினம் மாலை  மரணமடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X